திருவள்ளுவர் சிலை புறக்கணிப்பு- ரவிக்குமார் புகார் மீது தமிழக அரசு நடவடிக்கை

Views : 458

பதிவு செய்த நாள் 13-Feb-2020

கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டு இருப்பது தொடர்பாகவும் சிலை சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது தொடர்பாகவும் தமிழக முதலமைச்சருக்கு கடந்த 19 1 2020 அன்று நான் கடிதம் எழுதியிருந்தேன் அதற்கு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளர் இன்று பதில் அனுப்பியுள்ளார் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்