Test data

Views : 49

பதிவு செய்த நாள் 09-Mar-2020

கலை அறிவியல் கல்லூரி

கொரோனா விழிப்புணர்வு முகாம்


நாகர்கோவில் மார்ச்


நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது


மாவட்ட அளவில் முன்னதாக நடந்த விழிப்புணர்வு முகாமில் நோடல் ஆபீசர் அரசு அறிவியல் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் பங்கேற்றார். மாவட்ட அளவில் உள்ள கலைக்கல்லூரி பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கிறிஸ்துவ கல்லூரி சேவியர் கத்தோலிக் இன்ஜினியரிங் கல்லூரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்துகொண்டனர்.


நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் தமிழ்துறை தலைவர் அலெக்சாண்டர் பொருளியல் துறை தலைவர் சுசீலா பாய் முன்னிலையில் முதல் சுழற்சி என்எஸ்எஸ் சார்பில் கலைச்செல்வி தலைமையிலும் இரண்டாவது சுழற்சி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் அலுவலர் மெர்ளி ஆகியோர் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்