|
நண்பர்களே குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என நான் முன்னெடுத்துவந்த பிரச்சாரத்தை நீங்கள் அறிவீர்கள். எனது முயற்சி வீண்போகவில்லை தமிழக அரசு தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் உள்ள இருபத்தொரு லட்சம் குடிசைகளையும் எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக கட்டிக் கொடுக்கும் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில்
|
|
Read more...
|
|
நண்பர்களே எதிர்வரும் ஆறாம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் எனது ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அத்துடன் , மணற்கேணி பதிப்பகத்தின் இரு நூல்களும் வெளியாகின்றன. |
|
Read more...
|
|
'ரவி, நான் அங்கு வருகிறேன் ஒன்றும் பிரச்னை இல்லையே?' என்று பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராயின் குறுஞ்செய்தி வந்தபோது, அவரை வர வேண்டாம் என்றுசொல் வதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன. அடுத்ததாக, உருவாகி இருந்த புயல் சின்னம். மழை கொட்டிக்கொண்டு இருந்தது. எனது தொகுதியில் வீராணம் ஏரி நிரம்பி உபரி நீரைத் திறந்துவிட்டதில், பல கிராமங்களில் வெள்ளம். இவை எல்லாவற்றையும் மீறி, 'ஒரு பிரச்னையும் இல்லை. உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன்' எனப் பதில் அனுப்பினேன். புயல் பலவீனமாகிவிடும், மழை நின்றுவிடும், வெள்ளம் வடிந்துவிடும். எல்லாமே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என ஏனோ என் உள்மனம் சொன்னது.
|
|
Read more...
|
|
|
ரவிக்குமாரின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கவிஞர் சுகுமாரன் , மனுஷ்யபுத்திரன் ,டாக்டர் வசந்தி தேவி தொல். திருமாவளவன் , அமைச்சர் தங்கம் தென்னரசு , டாக்டர் அ ராமசாமி, எழுத்தாளர் இமையம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நூலாசிரியர் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஏற்புரை வழங்கினார் |
|
Read more...
|
|
|
பி. சாய்நாத்
பத்திரிகையாளர்
சர்வதேசப் புகழ்பெற்ற பத்திரிகையாளரான பி. சாய்நாத் சாதாரண மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வறட்சி பற்றிய அவரது கட்டுரைகள் “Everybody loves a good drought” என்ற நூலாக வெளிவந்துள்ளன. தற்போது தலித் பிரச்சினை குறித்து இந்து நாளேட்டில் அவர் எழுதிவரும் கட்டுரைகள் நூலாக வெளிவரவுள்ளன. சென்னை வந்திருந்த சாய்நாத்திடம் (தலித் இதழ் எண் 6, ஜூன் 2003இல் வெளியிடுவதற்காக) இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் இதனைப் பதிவு செய்தவர் : டாக்டர் ஆர். அழகரசன், தமிழாக்கம் : ரவிக்குமார்
|
|
Read more...
|
|
|
கடந்த ஏப்ரல் மாதத்தில் பன்றிக் காய்ச்சல் மெக்சிகோவை தாக்கியபோது, அந்த அரசாங்கம் செய்வதறியாது நிலைகுலைந்துபோனது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் குவிந்தனர். இதை சமாளிப்பதற்கு உடனடியாக ஆலோசனையில் இறங்கிய மெக்சிகோ அரசாங்கம், கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மெக்சிகோவில் 'ஹெல்த் எமர்ஜென்சி'யை அறிவித்தது. அரசுத் துறை, தனியார் துறை சார்ந்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டன. உணவு, மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனாவசியமாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. மக்களும் அதை மதித்து நடந்துகொண்டார்கள்!
|
|
Read more...
|
|
|
|